செழுந்தமிழ் நற்பணி மன்றம் ( SELUNDHTHAMIZH CHARITY FOUNDATION ) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும் கருத்தரங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (14/10/2016) ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டது.பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை படத்தில் காணலாம்.
அதன் அடிப்படையில் இந்த செயலமர்வின் முதல் கட்டமாக நம் தாய்மொழியான தமிழ் பாட கருத்தரங்கு இன்று ....
பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தில் 100 இற்கும் அதிகமான மாணவர்களின் பங்களிப்புடனும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இனிதே ஆரம்பமாகி இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்வை சிறந்த முறையில் நடாத்த உதவிய பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு.பெருமால் முத்துலிங்கம் அவர்களுக்கும் கருத்தரங்கை நடாத்தி தந்த ஆசிரியர் திரு.கோபாலகிருஷ்னர் அவர்களுக்கும் எமது இவ் செயலமர்வின் ஒழுங்கமைப்பு குழு சார்பாக இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.








No comments:
Post a Comment