view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Tuesday, October 18, 2016

Seminar in BD/ Sri Ganesha Tamil Maha Vithiyalayam, mithunpitiya

செழுந்தமிழ் நற்பணி மன்றம் (Selundhthamizh Charitable Foundation) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும்கருத்தரங்குகள் நடைபெறுகின்றன .அதனை தொடர்ந்து 2016/10/18 செவ்வாய்கிழமை இன்று 
பது / ஸ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.


 இப்பரீட்சை மற்றும் கருத்தரங்கானது ஆசிரியர்
திரு. கார்மேகவண்ணன் அவர்களின் தலைமையின் கீழ் இரு கட்டமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது . முதல் கட்டமாக இன்று (18/10/2016) மாணவர்களுக்கு பரீட்சை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை (19/10/2016) ஆசிரியர் திரு.கார்மேகவண்ணன் அவர்களினால் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இன்று பது / ஸ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலய க.பொ.த சாதாரணதர மாணவர்கள் பரீட்சைக்கு முகம் கொடுப்பதையும் ஆசிரியர் திரு.கார்மேகவண்ணன் மேற்பார்வை செய்வதையும் படங்களில் காணலாம். .
இந்நிகழ்வை சிறந்த முறையில் நடாத்த உதவிய பது / ஸ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு.அன்னதாசன் அவர்களுக்கும் கருத்தரங்கை நடாத்தி தந்த ஆசிரியர் திரு.கார்மேகவண்ணன் அவர்களுக்கும் இந்நிகழ்வை சிறந்த முறையில் ஒழுங்கமைப்பு செய்த ஆய்வக உதவி ஆசிரியர் திரு.நிரன்ஜன் அவர்களுக்கும் இவ் செயலமர்வின் ஒழுங்கமைப்பு குழு சார்பாக இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.





No comments:

Post a Comment